சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய போட்டியில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் வெற்றி!

சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய போட்டியில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கூகுள் கோட் இன் – 2019 (Google Code – In 2019) போட்டியிலேயே நித்தியானந்தன் மாதவன் என்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் வெற்றி பெற்றுள்ளார்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 566 மாணவர்கள் பங்கேற்றனர். 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 பணிகள் (tasks) வழங்கப்பட்டன.

இதில் Apertium என்ற மென்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடத்தைப் பெற்று Grand Prize Winner பட்டம் வென்றுள்ளார்.