நீண்டகாலம் வாழ விரும்பினால் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! சாப்பிட்டால் கொடிய நோய் வந்து செத்துடுவீங்க…!

பொதுவாக புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான்.

அத்தகைய உணவுகளைப் பார்த்தால், தற்போது அன்றாடம் அனைவரும் சாப்பிட்டு வருபவையாகத் தான் இருக்கும்.

ஆகவே அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்தால், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்டு கடைகளில் விற்கப்படும் உணவுகள் தான் இருப்பதிலேயே மிகவும் மோசமானது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தான் மிகவும் ஆபத்தானது. ஆய்வு ஒன்றில், தொடர்ந்து பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்து வந்தால், 44 சதவீதம் விரைவிலேயே மரணத்தை சந்திக்கக்கூடும் என்று சொல்கிறது. ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எளிதில் அதிகரிக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடித்ததாக இருக்கும். ஆனால் அதனை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதில் பதப்படுத்த, சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களானது, புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிகம் சாப்பிட வேண்டாம்.

ஹைட்ரோஜினேட்டட் அல்லது வெஜிடேபிள் ஆயில்

வெஜிடேபிள் எண்ணெயில் அளவுக்கு அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. பொதுவாக எதுவுமே அளவுக்கு அதிகமாக சென்றால் மிகவும் ஆபத்தானது. அதேப் போல தான் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அவை உடலில் இதய நோய் முதல் புற்றுநோய் வரை கொண்டு வந்துவிடும்.

வறுத்த மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்கள்

வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் கிளைசீமிக் என்னும் பொருள் நிறைந்துள்ளது. கிளைசீமிக் என்றாலே கார்சினோஜென்கள் தான். இவற்றை அதிகம் எடுத்து வரும் போது, அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்களான கோக், சோடா போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்படக்கூடும்.

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்

டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதில் உணவுகளை வைக்கும் போது, டின்களில் உள்ள கெமிக்கல்களானது உணவில் கலந்துவிடும். பின் இதனை தொடர்ந்து நாம் உட்கொண்டால், அவை உடலில் மிகவும் மோசமான புற்றுநோய் செல்களை உற்பத்தி செய்து, உயிருக்கே உலை வைத்துவிடும்.