யாழ்ப்பாணத்தில் சிகிச்சைக்காக சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழப்பு!

அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த இ.அழகேந்தினி (வயது-46) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சிகிச்சைக்காக அல்வாய்ப் பகுதியிலிருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளை திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீழ்ந்தவரை தூக்கி வைத்தியசாலையில் சிகிச்சையளித்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ் இறப்புத் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.