கொரோனா வைரஸ்! அன்றே கண்டுபிடித்த தமிழன்

கடந்த சில நாட்களாக உலகையே அச்சுறுத்தி வரும் விசயம் கொரொனோ வைரஸ். சீனா நாட்டில் தொடங்கி இன்று வேறு சில நாடுகளை சேர்ந்த சிலருக்கும் இதன் தொற்று இருக்கிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவிலும் பரவியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கி 2 முதல் 7 நாட்கள் வரையிலான வறட்டு இருமல், மூச்சு விடுவதே சிரமமாக அமைந்து கடைசியில் உயிரிழிப்ப நேரும் என்பதே உண்மை.

இந்நிலையில் இந்த காய்ச்சல் பாம்பு கறி சாப்பிடுபவர்களிடமிருந்து பரவுவதாக சொல்லப்பட்டு வருகிறது.

காலத்தை துல்லியாக கணித்து வைத்த முன்னோர் மருத்துவத்திலும் சிறந்து விளங்கினர். இதில் சித்த மருத்துவர் என்றால் உடனே அகத்தியர் தான் நம் நினைவிற்கு வருவார்.

அவர் மருத்துவம் குறித்த தன்னுடைய ஓலைச்சுவடிகளில் குறிப்பை பாடலை எழுதிவைத்துள்ளார்.

“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு

கர்ப்பமறியா கன்னியும்

வாயு பகவான் பகைகொண்டு

பித்தம் சித்தம் சிதைகொள்வாள்” என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.

இதன் விளக்கம் என்ன வென்றால் பாம்பை சாப்பிட்டால் உலகத்திலுள்ள அனைத்து நோய்களும் ஒன்று சேர்ந்து தாக்கியது போல கர்ப்பமே தரிக்காத இளவயதினரை கூட தாக்கி நுரையீரல் (வாயு – சுவாசம்) பாதிக்கப்பட்டு, பின் கல்லீரல் (பித்தம்), மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு இறுதியாக இறந்து போவார் என்று பொருள்.

இந்நிலையில் சீனர்கள் அதிகம் பாம்பை உணவாக உட்கொள்வதால் தான் இந்த வைரஸ் பரவியது எனவும் கூறப்படுகிறது. ஆனால் நம் இந்திய நாட்டில் பாம்புகள் தெய்வமாக வழிபடுகிறது.

தமிழும், தமிழ் ஆன்மீகம் இன்றும் தழைத்து நிற்பது தெரிகிறது.