சிறுமியின் கைகளை கட்டி, பிறப்புறுப்பில் இரும்பை சொருகி உல்லாசம் கண்ட 52 வயது காமுகன்..

இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 வயது சிறுமிக்கு அரங்கேறியுள்ள பெரும் துயரம் பதறவைத்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் பணியாற்றி வருபவன் யோகிலால் ரஹங்கதாலே (வயது 52).

இவருடன் பணியாற்றி வந்த வாலிபர் இவரது அறையில் தங்கியுள்ளார். இந்த வாலிபரின் சகோதரி மற்றும் அவரது உறவுக்கார பெண், இதே பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதியன்று 19 வயது சிறுமியின் சகோதரர் மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விஷயம் தெரிந்த வயோதிகன் பெண்ணிற்கு பாதுகாப்பாக இல்லாமல் அரங்கேற்றிய கொடூரம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் சிறுமி தனியாக இருந்த நிலையில், சிறுமியின் மீது மோகம் கொண்ட கொடூரன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அலறவே, சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளான்.

பின்னர் சிறுமியை கயிறு வைத்து கையினை கட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகி சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளான்.

இதனால் உடல் மிகவும் சோர்வடைந்த நிலையில் சிறுமி மயக்கமடைந்து, காம வெறி தீர்த்த காமுகன் சிறுமியை மயக்கத்தில் இருக்கும் போதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளான்.

பக்கத்து வீட்டில் வசித்து வந்த மற்றொரு பெண்மணி எதிர்பாராத விதமாக இவரை சந்திக்க வந்த நேரத்தில், இவரின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். பின்னர் சிறுமி சுதாரித்து தனது சகோதரருக்கு விஷயத்தை தெரிவிக்காது, அவசரமாக வரச்சொல்லியுள்ளார்.

சகோதரன் இல்லத்திற்கு வந்ததும் தனக்கு நடந்த கொடூரத்தை கண்ணீருடன் தெரிவிக்கவே, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் காமுகன் யோகிலாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.