திருமணத்திற்கு குட் பாய் சொல்லும் தென் கொரியா பெண்கள்…! அதிர்ச்சியில் உறைந்த ஆண்கள்..!!

தென் கொரியாவில் திருமணம் செய்ய மறுக்கும் பெண்களால், ஆண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் சிங்கிள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல், திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கிள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா?

திருமணம் செய்துகொள்ள போவதில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை, ஆண்களுடன் எவ்வித உறவையும் கொள்ளப்போவதில்லை. சிங்கிள்களாகவே இருப்போம். இப்படி சொல்லிக்கொண்டு தான் சுற்றி வருகின்றனர் தென்கொரிய இளம்பெண்கள். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆண்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் இரண்டு பெண்கள் தான். Jung Se-young, Baeck Ha-na எனும் இரண்டு பெண்ணியவாதிகள் சேர்ந்து தென் கொரியாவில் no marriege எனும் இயக்கத்தை தொடங்கினர். இந்த இயக்கத்தில் இணைய வேண்டும் என்றால் நான்கு 4 கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதாவது டேட்டிங், திருமணம், செக்ஸ், குழந்தைகள் எனும் இந்த நான்கிற்கும் no சொல்லும் பெண்கள் மட்டும் தான் இந்த இயக்கத்தில் இணைய முடியும். விளையாட்டாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தென்கொரியாவில் தற்போது பூதாகரமாகியுள்ளது.

ஆரம்பத்தில் 10 இருபது பேர் என ஆதரவளித்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். சமீபத்தில் தென்கொரிய இளம்பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 44 சதவிகிதம் பெண்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளனர்.

திருமணம் வேண்டாம் என அடம்பிடிக்கும் 56 சதவீதம் பெண்கள் கூறும் காரணங்களும் அதிர்ச்சி ரகம்… 

➤இது என் உடல் என் விருப்பம். பிரசவத்தின் உடல் வலி எனக்குத் தேவையில்லை.

➤ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதை காட்டிலும், நான் தனிமையில் வாழ்ந்து எனது வாழ்க்கை லட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்..

➤திருமணம் செய்துகொண்டு கணவருடன் சண்டையிட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை.

இதுபோன்று நீளும் தென்கொரிய பெண்களின் காரணங்களை கண்டு விழிபிதுங்கி நிர்கின்றனர் ஆண்கள்.. அத்துடன் நோ மேரேஜ் இயக்கத்தின் காரணமாக அந்நாட்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரமாரியாக குறைந்து வருகிறது. இது தொடர்ந்து வந்தால் தென் கொரியா மோசமான பின்விளைவுகளை சந்திக்கலாம் என உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகிலேயே குறைந்தளவு குழந்தை பிறப்பை கொண்டுள்ள தென் கொரியாவில், பெண்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராதவரை எதுவும் மாறுவதற்கு வாய்ப்பில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர் சிங்கிள் ஆண்கள்..