தேவையானவை:
அறுகம்புல் – ஒரு கைப்பிடி,
மிளகு – 10
செய்முறை:
அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
பலன்கள்:
பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும்
உத்தாமணி இலை கஷாயம்:
தேவையானவை:
ஓமம் – 20 கிராம்,
சோம்பு – 10 கிராம்,
சீரகம் – 5 கிராம்,
உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை – சிறிதளவு
செய்முறை:
ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், தீரும்.