மருத்துவ குணம் கொண்ட அருகம்புல்லின் பயன்கள்..!

தேவையானவை:

அறுகம்புல் – ஒரு கைப்பிடி,

மிளகு – 10

செய்முறை:

அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.

பலன்கள்:

பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும்

உத்தாமணி இலை கஷாயம்:

தேவையானவை:

ஓமம் – 20 கிராம்,

சோம்பு – 10 கிராம்,

சீரகம் – 5 கிராம்,

உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை – சிறிதளவு

செய்முறை:

ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், தீரும்.