“அவரை முழுசா நம்பினேன்”… “என்னை இப்படி ஏமாற்றிவிட்டார்”… பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு…!

மும்பையில் பிறந்து வளர்ந்த மலையாள பெண் மீரா வாசுதேவன். “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த “உன்னை சரணடைந்தேன்” திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் மீரா வாசுதேவன் நடித்த ‘அறிவுமணி’, ‘ஜெர்ரி’, ‘கத்தி கப்பல்’ உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். மீண்டும் அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அடங்கமறு” படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தீவிரமாக வாய்ப்பு தேடிவருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள மீரா வாசுதேவன், தன்னால் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியாமல் போனதற்கு தனது மேனேஜர் தான் காரணம் என தெரிவித்துள்ளார். “தன்மத்ரா” படம் ஹிட்டான போது எனக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. எனக்கு மொழி பிரச்சனை இருந்ததால், நான் எனது மேனேஜரை முழுமையாக நம்பினேன். அதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.