நடக்க முடியாமல் இருந்த மஞ்சிமா தற்போது எப்படி இருக்கிறார்?

அச்சம் என்பது மடமையடாவில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சிமா. அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் சில மாதங்கள் முன்பு அடிபட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகியிருந்தது.

தற்போது இது பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவர். “என்னால் இனி நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, முக்கியமாக நடனம் ஆட முடியுமா என்று என் கேள்விகள் இருந்தது. என்னால் முடியாது என்று தான் என் மனதில் பதில் இருந்தது. ஆனால் என் FIR பட இயக்குனர் மனு ஆனந்த் தான் என்னை ஊக்கப்படுத்தினார்.” “அவர் என் மீது நம்பிக்கைகாகவே நான் bedல் இருந்து எழுந்து படிப்படியாக நடக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் ஷூட்டிங் போன போது நன்றாக பார்த்துக்கொண்டனர். தற்போது 100 சதவீதம் குணமடைந்துவிட்டேன்” என மஞ்சிமா தெரிவித்துள்ளார்.