கடந்த 102 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் பியூரிட்டோ ரிக்கோவில் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆளுநர் வாண்டா வாஸ்குவெஸ் அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறார்.
சென்ற 2 நாட்களாக தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கங்களால்,அமெரிக்காவுக்கு சொந்தமான கரீபியன் தீவான பியூர்ட்டோ ரிக்கோ குலுங்கியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்தார்கள். அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் மீது சுவர் இடிந்துவிழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, அனைத்து மின்கம்பங்கள், மின்நிலையங்கள் சேதம் அடைந்த காரணத்தினால் மின்சாரதிற்கு தடைவிதிக்க பட்டது. அவசர சேவைகள் தவிர அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு அவசரகால தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.