பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்..

பிரபல நடிகர் கலாபவன் மணி தமிழ் மற்றும் மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி நிலையில் இருந்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கலாபவன் மணியின் பிரேத பரிசோதனையில், உடலில் மெத்தில் மற்றும் மெத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. இதனால் 2017ம் ஆண்டு மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பிறகு கேரளா நீதிமன்ற உத்தரவின்பேரில் கலாபவன் மணியின் உடலை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தந்த 32 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கலாபவன் மணி கடுமையான கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மணியின் மரணத்தில் இருந்த சந்தேகங்கள் தற்போது இந்த அறிக்கையால் விலகியுள்ளது.