கமல்ஹாசன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் அண்மையில் கால் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்து ஓய்வில் இருந்து வரும் அவர் தன் கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் குடியிரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், மாணவிகள் பலரும் போராடி வந்தனர். அவர்களை நேரில் சந்தித்து கமல் பேசினார்.

இச்சட்டத்தை அவரும் ஆதரிக்கவில்லை என்பத் அவர் கருத்துக்களில் தெரிந்தது. இதனால் திமுக நடத்தும் பேரணியில் அவரின் கட்சி கலந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி வட்டாரத்தில் இருந்து வந்தது.

தற்போது தனது சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் அந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் திமுக அதிருப்தி அடைந்துள்ளது.