யாழில் மாபெரும் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் வடமராட்சி கிழக்கில் திரண்ட 50இற்கும் மேற்பட்டோர், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளப்படுத்தினர்.

அத்துடன், மணல் வளம் சூறையாடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கையளிக்கப்பட்டது. அந்த மனுவை பிரதேச செயலர் சார்பில் அவரது உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.