இளைய தளபதி விஜய்யுடன் நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி?

இளைய தளபதி விஜய்யுடன் நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி? என்பதை பிரபல நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.படப்பிடிப்பில் என்னதான் பிஸியாக இருந்தாலும் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்றால் விஜய் அதற்காக தனி நேரத்தினை ஒதுக்கிவிடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விடயமேஇவரது நண்பர்கள் கூட்டத்தில் நடிகர்கள் ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் தான் மிக முக்கியமானவர்கள் என்று கூறலாம். அதிலும் நண்பர்களை சந்திக்க முடிவெடுத்துவிட்டால் அதில் ஸ்ரீநாத் வருகிறாரா என்பது விஜய்யின் முதல் கேள்வியாக இருக்குமாம். ஆம் அந்த அளவிற்கு தனது கொமடி பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாராம்விஜய்யுடன் தாங்கள் இவ்வாறு நெருங்கிய நண்பர்கள் ஆனது குறித்து சஞ்சீவ் கூறுகையில், விஜய் படித்தது சென்னை லயோலா கல்லூரி என்பது பலரும் அறிந்ததே.

கல்லூரியில் நடந்த ஒரு நுழைவு தேர்வில் விஜய், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்விஸ்காம் சேர்வதற்கு முதலில், Aptitude தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமாம். இத்தேர்வின் போது விஜய், ஸ்ரீநாத் அருகே அமர்ந்திருந்தாராம். மேலும் தேர்வில் சில கேள்விகளுக்கான பதிலை மூன்று பேரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு எழுதினார்கள். அப்போது ஸ்ரீநாத் ஓ… இந்த கேள்வியா? என்று ஆர்வமாக கேட்டுவிட்டு, இறுதியில் பதில் சத்தியமா தெரியாதுங்க… என்று கூறியதைக் கேட்ட விஜய் சிரித்துவிட்டாராம்.பின்பு தேர்வு முடிந்து வெளியே வந்ததும் மூன்று பேரும் பேசி நண்பர்களாக ஆகிவிட்டார்களாம். அதிலிருந்து 25 வருடங்களாக தங்களது நட்பு தொடர்வதாக சஞ்சீவ் கூறியுள்ளார்.