திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்..

தமிழகத்தில் சேர்ந்த திருநங்கை ஒருவர் முகநூல் மூலம் பழக்கமாகிய இளைஞரை திருமணம் செய்துக்கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் சாலக்கரையைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

அவரது பெயர் அமிர்தா. இவர் ஒரு திருநங்கையாவார்.

இந்நிலையில், பி.எஸ்சி பட்டப்படிப்பு வரை பயின்றுள்ள அமிர்தாவிற்கு, முகநூல் மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் என்பவர் பழக்கமாகியுள்ளார்.

லட்சுமண் மும்பையில் சினிமா ஷூட்டிங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இருவரும், முகநூலில் பேஸ்புக்கில் தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற, இது குறித்து பெற்றோரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, நேற்று காலை இவர்கள் இருவருக்கும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். பொலிஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன். நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன். அப்போது தான் பேஸ்புக் மூலம் எனக்கும், மும்பையைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகினோம், அது ந நட்பு காதலாக மாறியது.

எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால், அதற்கு எதிர்ப்பு இருந்தது. பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கி இன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

லட்சுமணன் கூறுகையில், எங்களின் காதலைப் பற்றி கூறுகையில், முதலில் பெற்றோர் எதிர்த்தனர். அதன் பின் அவர்களை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டோம்.

இனி நான் மும்பை செல்லப் போவதில்லை. திருவந்திபுரத்தில் அமிர்தாவுடன் வசிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.