ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி..பின்னர் நடந்த விபரீதம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவியை கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுலதா என்கிற என்ற நர்சிங் மாணவி ஒருவர் தன் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தன் பெற்றோரின் தொந்தரவு காரணத்தால் மஞ்சுலதா தனது கணவரை விட்டுவிட்டு நர்சிங் விடுதியில் சென்று தங்கிவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார்.

அப்போது, பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சைஃப்கான் மற்றும் அவரது நண்பர் முஸ்தவாவும் விடுதிக்கு சென்றுள்ளனர்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மிகுந்த கோபமடைந்த சைஃப்கான் அருகிலிருந்த தோசைக் கல்லால் ஓங்கி அடித்து மஞ்சுலாவை கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த மஞ்சுலாவின் தங்கை மனிஷாவையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் இருவருமே பலத்த ரத்த காயத்துடன் பயங்கரமாக கத்தியுள்ளனர். விடுதியில் இருந்து வந்த மரண ஓலத்தை கேட்டு ஓடிவந்த விடுதி பாதுகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார்.

ஆனால், அந்த விடுதி காப்பாளரிடம் இருந்து இருவரும் லாவகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பலத்த ரத்த சேதம் ஏற்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளன மஞ்சுலதா மற்றும் மனிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பற்றி அறிந்து வந்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் கோபமாக இருந்துள்ளார் சைஃப் கான். மேலும், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக தனது மனைவி மஞ்சுலதா டிக் டாக் செய்ததால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொலை செய்ய உடந்தையாக இருக்கும்படி அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.