இன்றைய ராசிபலன் (12.12.2019)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 12 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளையே செய்துவாருங்கள். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் வருகை யால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபா ரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சில ருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.காரியங்களில் அனுகூலம் உண்டா கும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத் தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

பணவரவு இருந்தாலும் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு தந்தைவழியில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண் டாம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப் பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவா தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப் படும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை கிடைக்கக்கூடும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணியின் காரணமாக திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணியின் காரணமாக திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார் கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர் களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.