மருமகள் செய்த மோசமான செயல்.. போலீஸ் புகாரளித்த மாமனார்..! கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் திருமணமான நிலையில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்ததால் கிராம மக்கள் இருவரையும் கட்டிவைத்து அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இதனால், பெண்ணின் கணவர் இல்லாத நேரங்களில் அவர் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

இந்த விவகாரம், குறித்த பெண்ணின் மாமனாருக்கு தெரியவரவே, உடனடியாக அவர் ஊர் பஞ்சாயத்தில் கூறி, ஊர்மக்கள் முன்னிலையில், குறித்த பெண்ணையும், இளைஞரையும் மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.