இந்தியாவில் பிரியங்கா ரெட்டி வழக்கில் உண்மையில் அன்று நடந்தே வேறு! சிறை அதிகாரிகளை அதிரவைத்த நான்கு பேர்

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் சம்பவத்தில், அவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதால், உடனடியாக பிரியங்கா ரெட்டியின் மரணத்திற்கு யார் காரணம்? என்பதில் பொலிசார் தீவிரம் காட்டினர்.

அதன்படி சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பிரியங்கா எரிந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இது குறித்து பொலிசார் தரப்பு கூறும் போது, அவர் இறந்தபின் எரித்துக்கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நாங்கள் யூகிக்கிறோம். விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்கள் குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டியுள்ளனர்.

மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர்.

பெண் மருத்துவர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லொரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரிக்கத் துவங்கியுள்ளனர்.

அப்போது தான் அந்தப் பெண் உயிருடன் இருந்தது தங்களுக்குத் தெரியவந்தது என்றும், அதுவரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், முதலில் பெண் மருத்துவரை கொல்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை. பொலிசாரிடம் புகார் கொடுப்பார் என்று நினைத்தே பெண்ணைக் கொலை செய்ததாக நான்கு பேரும் கூறியுள்ளனர்.

இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த விவகாரத்தில் எதையும் சொல்ல முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்கவுண்டரின் போது மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டு கொல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் சடலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

என் கவுண்டரில் சுட்டு கொன்றது எப்படி?

இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலை அருகே 4 பேரையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர் ? என பொலிசார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற பொலிசாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் தற்காப்புக்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.