“கமல் போஸ்டருக்கு சாணி அடித்தேன்” : சர்ச்சை பேச்சுக்கு லாரன்ஸ் விளக்கம்!

நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ராகவா லாரன்ஸ், நடிகர் கமல்ஹாசனின் போஸ்டரில் சாணியடித்தேன் எனத் தெரிவித்தார்.  இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்ததாகவும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கமல் மீது அதிக மரியாதை உள்ளது என்றும், தான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.