நாள் முழுவதும் சந்தோஷமா இருக்க… இதை செய்யுங்கள்.!

காலை எழுந்தவுடன் மனதில் கீழ்கண்ட வரிகளை சொல்வதனால்… நீங்கள் விரும்பியவை உங்களுக்கு கிடைக்கும்.

என் வாழ்க்கை மிக அழகானது.

நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்.

நான் மிகவும் சக்தி வாய்ந்த மனிதன்.

எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது.

எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.

என்னால் வாழ்வில் எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.

நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே நாடுகிறேன்.

என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்.

எனது எண்ணம், வாக்கு மற்றும் செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.