சிக்கலில் சிக்கும் திமுக.! அசால்ட்டாக வேடிக்கை பார்க்கும் அதிமுக.!

செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உருப்பினரான வரலட்சுமி மதுசூதனன் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் மேன் பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து மறைமலை நகரில் இருக்கும், அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் திமுகவினருக்கு சிக்கலாக அமையும் இந்த சம்பவம் உடன்பிறப்புகளுக்கு நடுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில், அதிமுகவினர் கூலாக வேடிக்கை பார்க்கின்றனர்.