பிக்பாஸ் சீசன் 2 நடிகைக்கு பாலியல் தொல்லை!

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் நடிகை சஞ்சனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நோவோடெல் ஹோட்டலுக்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடின் மகன் ஆசிஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சஞ்சனா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், நோவோடெல் ஹோட்டலில் உள்ள பப்பில் ஆசிஷ் கவுட் குடிபோதையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் அவர் என்னையும், மேலும் சிலரையும் தாக்கினார். தாக்கியதோடு மட்டும் இல்லாமல்  முதல் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிடப் முயன்றார்.

இதை தடுத்தவர்களிடம் அவர் மோசமாக நடந்து கொண்டார். அங்கிருந்த பவுன்சர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். ஆசிஷின் நடவடிக்கையால் பயந்து போன நானும், என் தோழியும் அங்கிருந்து  சென்றுவிட்டோம்.

இது அனைத்திற்கு ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமரா தான் சாட்சி. அதில் பதிவாகியுள்ளதை பார்த்து ஆசிஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். சஞ்சனாவின் புகாரின்பேரில் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.