காதலனுடன் தனிமை!… தடையாக இருந்த அத்தையை கொன்ற பள்ளி மாணவி!!

கொடைக்கானலில் காதலனுடன் தனிமையில் இருப்பதற்கு தடையாக இருந்த பெண்ணை திட்டமிட்டு கொன்ற 11ம் வகுப்பு மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் முருகானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இருவரும் ஒரேவீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 22ம் திகதி முருகானந்தம் வேலைக்கு சென்ற நிலையில், சுந்தரி சடலமாக மீட்கப்பட்டார், இதுகுறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.

முருகானந்தத்தின் சொந்தக்காரர்களிடம் விசாரணை நடத்தியதில், அவரது அக்கா மகளான லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து சுந்தரியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

தாங்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, சுந்தரி கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து லட்சுமியை கைது செய்த பொலிசார், மதுரை சீர்திருத்த பள்ளியில் சேர்த்ததுடன், தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர்.