தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோவிலிலே திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை கஸ்தூரி. அதன் பின்னர் கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் பல மொழிகளில் படம் நடித்துள்ளார்.
கஸ்தூரி அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றிய ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. திருமணத்திற்குப் பின்னர் நடிப்பிலிருந்து கஸ்தூரி முழுவதுமாக விலகினார்.
அதன் பின்னர் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 3 இல் கஸ்தூரி கலந்து கொண்டார். அதில் பெரும்பாலான மக்களின் வெறுப்பை சம்பாதித்து சில நாட்களிலேயே அவர் வெளிஏறினார்.
எப்போதும் சமூகவலைதளத்தில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது அரசியல் கருத்துக்களில் தலையிடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேய் போன்றதொரு மேக்கப்பை போட்டு கொடூரமான போஸ் கொடுத்து இருக்கின்றார். இதனை பார்த்த இணையதள வாசிகள் இந்த வயதில் இப்படி எல்லாம் தேவை தானா.? சாதாரணமாக இருந்தாலே பார்க்க முடியாது. இது வேறயா என்று கொந்தளித்து கமெண்ட் செய்துள்ளனர்.