நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு இருப்பதுண்டு. அதே வேளையில் அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.அவரின் படங்கள் தான் விநியோகஸ்தர்களுக்கு நியாயமான லாபம் கொடுக்கும் படம் பல பலரின் மனதில் உள்ளது.
அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் ஹீரோ படத்திற்கு தடை விதிக்க கோரி டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதனால் இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ல் வாங்கப்பட்ட இந்த கடனை 10 மாத தவணைகளில் திரும்பி செலுத்தவதாக கூறி பின் 24 ஏ.எம் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
நடிகர் #சிவகார்த்திகேயன் படத்திற்கு தடை.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.@Siva_Kartikeyan#SunNewsSocial #SunNews #ActorSivakarthikeyan #HEROMovie pic.twitter.com/aYzgdkyJDV
— Sun News (@sunnewstamil) November 14, 2019