ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரையும் ஆணைக்குழுவிற்கு அவசர அழைப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தெரிவித்தே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்கள் குறித்து இதன்போது ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் இன்று கலந்துரையாடப்படும் என கூறப்படுகின்றது.

இதேவேளை இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.