உள்ளாடையை வைத்து பெண்கள் மோசமான வேலை..!

அயல் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருகை தரும் பல பயணிகள் வெளிநாட்டு தங்கம், வெள்ளி மற்றும் பணம் போன்றவற்றை கடத்துவதை தங்களது வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். மேலும், அவ்வாறு கடத்தி வரும் பொருட்களை மறைத்து எடுத்து வருவதற்கு பல்வேறு விதமான யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

பெரும்பாலான கடத்தல்களை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு பிடித்து விட்டாலும், சிலர் அவர்களின் கண்களில் மண்ணை தூவி கடத்துவதும் அரங்கேறி தான் வருகிறது.

இது போல தான் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து சில பெண்கள் வந்துள்ளனர். அவர்களை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். பெண்கள் கொண்டு வந்த உடைமைகள் மற்றும் அவர்களின் உடலை சோதனை செய்த பொழுது தங்களுடைய உள்ளாடைக்கு உட்புறமாக தங்கத்தை வைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அதில் திருச்சியை சேர்ந்த ஜெசிமா, பிரவின்பானு மற்றும் அசன் முகமது ஆகிய மூவரிடம் இருந்து மொத்தமாக 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.