சுவையான வாத்து ரோஸ்ட்..! செய்வது எப்படி.?!

தேவையான பொருட்கள் : 

வாத்து கறி  – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 1 கப்
உருளைகிழங்கு –  2
கரம் மசாலா  – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் –  1 டேபிள் ஸ்பூன்
மிளகுதூள் –  3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சோம்புத்தூள்  – அரை டீஸ்பூன்
கிராம்பு –  2
ஏலக்காய் – 2
பட்டை – 1
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
வினிகர் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

முதலில் உருளைகிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து ஒவ்வொரு கிழங்கையும் 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனியாதூள், மிளகுதூள், சீரகத்தூள், சோம்புத்தூள் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

சிறிது அரைத்த மசாலாவை தனியாக எடுத்துவைக்கவும்.

பின்பு கறியை கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் அரைத்த மசாலாவையும், உப்பு, வினிகரையும் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

பின்பு எண்ணெய்யை சூடாக்கி அதில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்த மசாலாவை போட்டு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பொரித்து வைத்துள்ள கறித்துண்டுகளை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கலவை நன்கு கெட்டியாகி இறக்கும் சமயம் உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்.