ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து ரெலோவிலிருந்து தான் விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்திருந்தார்.

இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது வருகின்றது

இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் கடிதமொன்றையும் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார்.