டிக் டாக் இனிமேல் இதற்கும் பயன்படும்.!

தற்போது வரை பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்பட்டு வந்த டிக்டாக் செயலி இனிமேல் அறிவுசார்ந்த செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார்.

டிக்டாக் செயலியின் மூலமாக கல்வி மற்றும் பொது அறிவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் எஜூடோக் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக எஜூடோக் பிரிவின் தலைமைச் செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக ஜோஷ் டாக்ஸ், தி நட்ஸ் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார் ,