இரு வெளிநாட்டு பெண்கள் உட்பட மூன்று பேர் வெள்ளவத்தை பொலிஸாரால் திடீர் கைது!

இணையத்தளத்தில் விளம்பரம் செய்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று காரை பயன்படுத்தி நடமாடும் பாலியல் தொழிலை செய்து வந்த இரண்டு தாய்லாந்து பெண்கள் உட்பட மூன்று பேரை வெள்ளவத்தை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த தொழிலை வழிநடத்தும் முகாமையாளர் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல் இணையத்தளத்தில் தொடர்புக்கொண்டுள்ளனர். சந்தேக நபர் அதிகாலை இந்த பெண்களை அழைத்துக்கொண்டு காரில் வெள்ளவத்தை வந்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த பெண்களுக்காக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அறவிடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்கள் 26 மற்றும் 34 வயதானவர்கள் எனவும் அவர்கள் சுற்றுலா விசா அனுமதியில் வந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.