நேற்று மாலை கிளிநொச்சி விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு பயணித்த வயதானவர் ஒருவரே, முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி உயிரிழந்தார்.

இன்று மாலை 6.10 மணியளவில் கொக்காவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத் திட்டத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.