சிக்கலில் சிக்கிய சீமான்.!

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் மலேசியாவில் அந்த இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு அவரது ஆதரவு இருப்பதும் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துணை ஆணையர் டத்தோ அயூப் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் சீமானின் மலேசியா வருகை குறித்து விசாரித்து வருவதாகவும். புலிகள் ஆதரவு நடவடிக்கைகளில் சீமானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவரை மலேசியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்றும் டத்தோ அயூப் கான் கூறியுள்ளார்.