பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு ஏன் வரவில்லை? சரவணன் விளக்கம்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், டிராபியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களில் நடிகர் சரவணனும் ஒருவர்.

 தொடக்கம் முதல் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாகவும், முதல் மனைவியே திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், மனைவியில் வருமானத்தில் தான் சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன். இது போன்ற தவறுகளை இப்போதுள்ள இளைஞர்கள் யாரும் செய்யக்கூடாது என்பதற்காக இதனை தெரிவித்தேன்.

இதற்கு கமலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, பெண்கள் மத்தியில் சரவணனுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், பொது நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், தான், ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் எங்கும் பிக் பாஸ் பற்றி பேச விரும்பவில்லை. பிக் பாஸையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.