ஆயுதப்படை அதிரடி தாக்குதல்..!!

இந்த உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் ஆதிக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில்., தினம்தோறும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மேற்கு ஆப்ரிக்க பகுதியில் இருக்கும் பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கோர தாக்குதலில் சிக்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில்., சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி., பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆதிக்கம் செலுத்தி வரும் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு இராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்., ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த தருணத்தில்., அங்குள்ள சலிகெளியன் பகுதியில் ஆயுதப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில்., சுமார் 30 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். மேலும்., இராணுவத்தினர் – பயங்கரவாதிகள் இடையே நடந்த தாக்குதலில்., இராணுவத்தினருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.