மயக்கமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளிவரும் திடுக்கிடும் தகவல்

பிரபல தொகுப்பாளினி ஒருவர் கடந்த வாரம் மயங்கி கிடந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய உடலை சோதித்து பார்த்த மருத்துவர்கள் காரணத்தை கண்டு அதிர்ந்த நிலையில், அது குறித்து தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பெண் கடந்த வாரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

அதன் பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் அவரின் இரத்ததில் செக்ஸ் உணர்வை அதிகரிக்க செய்யும் போதை பொருள் கலந்திருப்பதை கண்டனர்.

அந்த போதை பொருளின் பெயர் ஹேப்பி பில்ஸ், இதை கல்லூரி பெண்கள், திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் புதிதாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதை ஒரு நெட்வர்க சத்தமே இல்லாமல் சப்ளை செய்து வரும் நிலையில், அந்த நெட்வர்க்கிடம் தான் இவர்இந்த போதை பொருளை வாங்கியுள்ளார்.

இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நெட்வர்க்கை பிடிக்க, பொலிஸ் தனிப்படை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நெட்வார் யார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை சப்ளை செய்பவர்கள் பெண்களை தான் அதிகம் டார்கட் செய்கின்றனர். முதலில் அவர்கள் குடிக்கும் பீரிலோ அல்லது மதுபானத்திலோ குறித்த போதை பொருளை கலந்து விடுவார்களாம்.

அப்படி முடியவில்லை என்றால், அவர்கள் அதைப் பற்றி கூறி, இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், அதன் சுகமே தனி என்று ஆசை காட்டுவார்களாம், அதன் பின் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று முதலில் இலவசமாக கொடுத்து, அதன் பின் அவர் இது எனக்கு பத்தவில்லை, இன்னும் கொடு என்ற அளவிற்கு ஆக்கிவிடுவார்களாம்.

இந்த ஹேப்பி பில்ஸை திரைத் பிரபலங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஒரு இசையமைப்பாளர் தானாம், இசையமைப்பாளர், பப் நிர்வாகி மற்றும் ஒரு நடிகை இந்த மூவர் கூட்டணி மூலமே சென்னையில் இந்த நெட்வொர்க் கொடிகட்டிப் பறக்கிறது

இவர்களிடம் சிக்கியவர்கள் தப்பிக்கவும் முடியாமல் விஷயத்தை வெளியே சொல்லவும் முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த நெட்வர்க் கும்பலை பொலிசார் பிடித்தால், பல தகவல்கள் வெளிவரும்.