யாழில் எதிராளிக்கு மிரட்டல் விடுத்த முறைப்பட்டாளர்

காசோலை மோசடி வழக்கு ஒன்றில் எதிராளியை பொய் சாட்சி வழங்குமாறு அச்சுறுத்திய முறைப்பாட்டாளரை யாழ்.நீதிவான் கடுமையாக எச்சாித்துள்ளாா்.

யாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து வழக்குடன் தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த போது , வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் பொய் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அன்றைய தினம் மாலை மூன்றாம் எதிராளி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளரின் சகாக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களின் மிரட்டல் சம்பவம் தொடர்பில் மூன்றாம் எதிராளி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எதிராளியின் சட்டத்தரணி , தமது கட்சிகாரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிற்கு கடுமை எச்சரிக்கை விடுத்த நீதவான் , இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் என கூறியதோடு வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.