இந்த உலகம் முழுவதும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் கடுமையான துயரத்தை அடைந்து வருகின்றனர். சொந்த கணவரால் நண்பர்களுக்கு கொடூர முறையிலான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய பெண்ணின் பரிதாப நிலையை எண்ணி காவல் துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் உள்ள கீதா காலனி பகுதியில் வசித்து வரும் கொடூரன் அதுல் அகர்வால். இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள டெல்லி காவல் நிலையத்தில் புகரொன்றை அளித்துள்ளார். இதனை கவனித்த காவல் துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த புகாரில்., எனது கணவரால் பாலியல் தொல்லைக்கு கடுமையாக நான் உள்ளாக்கப்பட்டுள்ளேன். எனது கணவனின் நண்பர்கள் என்னை கட்டயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுமட்டுமல்லாது இயற்கைக்கு மாறான கொடூர பாலியல் துன்புறுத்தலுக்கும் என்னை உள்ளாக்கினார்கள்.
மேலும்., கடந்த ஜனவரி மாதத்தின் போதும் எனது கணவரின் முன்னிலையிலேயே., கணவரின் நண்பர்களான சஞ்சய் கவுசிக் மற்றும் புஷ்பேந்திர மிஸ்ரா ஆகியோர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து., இயற்கைக்கு மாறான முறையில் கொடுமை செய்தனர்.
என்னால் வலி தாங்க இயலாமல் நான் கத்தி கதறியதை காதில் ஏற்றுக்கொள்ளாமல்., எனது கதறலில் ஆனந்தம் அடைந்தனர். இந்த விஷயம் குறித்து வெளியே கூறினால்., இயற்கைக்கு மாறான முறையில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமையை வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளோம்.
இதனை இணையத்தில் பரப்பிவிடுவோம் என்று எனது கணவரே மிரட்டினார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர்., உடனடியாக வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் அகர்வால் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.