சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கியவர்கள் பலர் உள்ளனர். அந்தவகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், தற்போது ரியோ வரை வந்துவிட்டனர் இன்னுமும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர்களை எல்லாம் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த புகழ் பெற்றவர் சித்ரா, இவர் தற்போது வெள்ளித்திரைக்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, தற்போது தான் கால்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இதில் தேவதர்ஷினி, வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல த்ரில்லர் கதையம்சம் கொண்டதாகும் என் தெரிவித்தார்.
மேலும், இதற்க்கான படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூரில் நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடியவுள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.