ஊறுகாய் செய்வது எப்படி.?

காரசாரமான மாவடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தயிர், மோர் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது ருசியாக இருக்கும் .

தேவையான பொருட்கள்: 

மாவடு – ஒரு கிலோ
கல் உப்பு- தேவைகேற்ப
கடுகு – 2 ஸ்பூன்
விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்.
மிளகாய்த்தூள் – 50 கிராம்

செய்யும் முறை:

மாவடுவை காம்பு நீக்கி நல்லா கழுவி, சுத்தமான துணியில் துடைத்து தண்ணீர் வடித்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் நிழலில் காய வைக்க வேண்டும். மா வடு நன்கு உலர்ந்த பின்பு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலக்க வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன்பின்னர் வறுத்துப் பொடித்த கடுகு, மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து விட வேண்டும். எல்லாம் நன்கு கலந்த பின் குலுக்கிவிட வேண்டும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. அடிக்கடி குலுக்கிவிட வேண்டும். இதை காரம் சேர்க்காமலும் செய்யலாம். நல்ல காரம் வேண்டும் என்றால் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மாவடு மாங்காய் ஊறுகாய்.