சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேரடி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகனின் பெயர் முத்து என்னும் அஜித்குமார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்., விடுதியில் தங்கி இருந்து பயின்று வருகிறார். இவர் தற்போது கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வரும் நிலையில்., கடந்த நான்காம் தேதியன்று சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில்., ஊருக்கு வந்த முத்து வெளியே சென்ற நிலையில்., இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திருப்பவில்லை. இதனையடுத்து இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்., இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., சந்தேகத்தின் பேரில் திருபுவனம் பழையூரை சார்ந்த திவாகர் என்பவனை கைது செய்தனர். இதனையயடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., கொலைக்கான அதிர்ச்சி காரணம் தெரியவந்துள்ளது. திவாகர் மற்றும் திவாகரை சார்ந்த கும்பல் நள்ளிரவு சமயத்தில் முத்துவை வைகை ஆற்றிற்கு வரவழைத்துள்ளனர்.
பின்னர் முத்துவை சரமாரியாக வெட்டி கொலை செய்த நிலையில்., கொலை செய்தும் ஆத்திரம் தீராததால்., தலையில் கல்லை போட்டு கொலை செய்து., உடலை வைகை ஆற்றிலேயே புதைத்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பான நிலையில்., முத்துவின் உடலையே வைகை கரையிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்து., பிரேத பரிசோதனையும் செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., பழிவாங்கும் நடவடிக்கையால் முத்து கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் இருப்பதால்., இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.