சுவையான சாக்லெட்டை சாப்பிட… சாக்லெட் தினம்.!

சர்வதேச சாக்லேட் தினம்:

உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம் செப்டம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், ‘கார்மெல் கேண்டி” சாக்லேட்டை கண்டுபிடித்தார். 1990ஆம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இவருடைய பிறந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.

தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

சையது முஜ்தபா அலி:

வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) பிறந்தார்.

வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராக திகழ்ந்தார்.

சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. ‘தேஷெ பிதேஷெ”, ‘ரம்ய ரசனா”, ‘பஞ்சதந்த்ரா” ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும்.

இவர் ஆனந்த புரஸ்கார் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 69வது வயதில் (1974) மறைந்தார்.