ஆண்கள் “அந்த விஷயத்தில்” செய்யும் சில முக்கிய தவறு..!

திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில தம்பதியினருக்கு இந்த விஷயத்தில் ஏற்படும் சில கருத்து வேறுபாடு காரணமாக கூட டைவர்ஸ் வரை சென்று விடுகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் திருமணம் முடிந்த பின் முதல் இரவிலேயே கூட இருவருக்கும் தவறான புரிதலைகள் ஏற்படும். அதற்கு சில காரணம் சொல்ல முடியும்.

புதுமண தம்பதிகள்..!

முதலிரவின் போது, ஆண்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா ?

மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு, எப்போது தாம்பத்தில் ஈடுபடுவோமோ என்ற ஆவல் இருந்தால், மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும். பல சந்தேகங்களையும் எழுப்பும்.. இதில் இப்படி ஒரு ஆவல் என்றால்,பேசுவதற்கு இடமே இல்லையா என்ற சிந்தனை மேலோங்கும்

முதலில் மனைவியிடம் அன்பா பேசி, பாசமாக நாலு வார்த்தை சொன்னால் தான் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும். அதே போன்று எந்த வித போர்ப்ளே இல்லாமல் நேரடியாக தாம்பயத்தில் ஈடுபட்டால் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காதாம்…

அன்பாக கட்டி பிடித்து பாசமாக முத்தமிட்டு இப்படியே அரை மணி நேரமாவது இருந்தால், பெண்கள் அன்பை உணர்வார்களாம். அதே போன்று மனைவியிடம் இது ஓகே வா, அது ஓகே வா என பேசிக்கிட்டே இருந்தாலும் பிடிக்குமாம். இது போன்று எதையும் செய்யாத ஆண்களை பெண்கள் கொஞ்சம் வெறுக்கத்தான் செய்வார்களாம்.

வாழ்க்கையில் இதெல்லாம் தான் முக்கியமா என்றால்..? இதுவும் முக்கியம் தான் என்கிறது வாழ்க்கையின் எதார்த்தம்.