மூத்த மருமகனிடமிருந்து இளைய மகளை காப்பாற்ற மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசிய மாமனார்

வவுனியாவில் மூத்த மகளின் கணவன் இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ் பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி, தந்தையொருவர் மகளைக் காப்பாற்றியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா, சாந்தசோலையில் வசித்துவரும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்குள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, குடும்ப வன்முறைகளும் இடம்பெற்று வந்துள்ளது.

இதன்காரணமாக மகளையும் மருமகனையும் தனியாக வசிக்குமாறு மாமனார் தெரிவித்ததை அடுத்து கடந்த மாதம் தமது குடும்பத்தினருடன் வெளியேறிய மருமகன் தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அதோடு பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து மருமகன் சீதனம் மற்றும் வீட்டைத்தருமாறு கோரி மனைவியைத் துன்புறுத்தியதுடன், தாயின் வீட்டிலுள்ள கால்நடைகளை விற்பனை செய்து பணம் வாங்கித்தருமாறும் மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

கணவனின் கொடுமைகள் தாங்க முடியாமல் மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கணவனை அழைத்து சமரசம் செய்து குடும்பச் சண்டைகள் இன்றி வசிக்குமாறு கோரி நேற்று முன்தினம் மாலை கணவனையும் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண் தனது மூன்று வயது மகனுடன் தனது தாயாரின் வீட்டிற்கு வந்தபோது மதுபோதையில் வந்த மருமகன் சாந்தசோலை மாமனாரின் வீட்டிற்குள் அ த்துமீறி உள்நுழைந்து மாமியார் மீது தலைக்கவசத்தினால் தாக்கியதோடு, மனவியின் தங்கை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதனை தடுக்கச் சென்ற மாமனாரையும் தாக்கிய குறித்த நபர் மனைவியின் தங்கையை பாலியல் துஸ் பிரயோகம் செய்ய முயற்சித்தபோது விபரீதத்தினை உணர்ந்த மாமனார் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய்த் தூளை அள்ளி மருமகனின் முகத்தில் வீசியுள்ளார்.

கண்ணில் பட்ட மிளகாய்த்தூளின் எரிவு தாங்கமுடியாமல் மருமகன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தபோது அயலவர்கள் சிலரும் மருமகன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்க முயன்றபோது மருமகன் ஓடி ஒழித்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மருகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ள நிலையில்,

அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டுசென்றதை அடுத்து தாய், மகள் இருவரும் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.