ஆடம்பரமும், பகட்டுமும் இன்றைய காலத்தில் ஒரு மனிதனின் அத்தியாவசியமாக மாறி வருகின்றது. எவ்வளவு தான் எளிமையான வாழ்க்கை சிறப்பு என்று பாடம் எடுப்பவர்களுக்கு, மேடையில் பேசும் சிலரும் கூட அந்த பகட்டு வாழ்க்கைக்குள் தான் இருக்கின்றனர்.
சமுதாயத்தில், அந்தஸ்து என்ற பெயரில் மக்கள் ஒருவரின் தரத்தை பணத்தை கொண்டு நிர்ணயிப்பது தான் மிகவும் மோசமமான ஒன்றாகிறது. ஒருவரின் நல்ல குணத்தையோ அல்லது அவரின் சேவை மனப்பான்மையையோ பெரிதும் கொண்டாடுவதில்லை.
திருடியாவது பணக்காரனாய் வாழ் என்ற கூற்றை உண்மையாக்கும் வகையில் தான் இன்றைய மக்களின் மனநிலை இருக்கின்றது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் உண்மையான வாழ்க்கைக்கு அர்த்தமே திகழும் சிலரை இந்த உலகம் எவ்வளவு ஏளனமாய் பார்க்கின்றது என்பதை முகநூலில் அப்படி ஒரு உண்மையான வாழ்க்கையை வாழும் பெண்மணி ஒருவர் விளக்கி இருக்கிறார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
நானும் என் கணவரும் மினிமலிஸ்டிக் வாழ்க்கைத் தத்துவத்தை பின்பற்றுகிறோம்.
என் கணவர் பத்து வயதிற்கு பிறகு சுயமியாக இருந்ததால் அவருக்கு அது சாத்தியப்பட்டது.
திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்பே நான் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேன்.
என் மகனும் எங்களைப் பார்த்து அதை பின்பற்றுகிறார்.
இதனால் எங்களால் கணிசமான தொகையை சில ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவ முடிகிறது.
நான் இப்போது எல்லாம் தங்கம் அணிவது இல்லை.
ஒரு காலத்தில் தங்கத்தையே தினம் ஒரு செட் மாற்றி அணிந்தவள் நான்.
இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்து இருக்கிறோம் என தோன்றுகிறது.
இன்று என் மகனின் பள்ளியில் எங்களைச் போன்ற ஒரு தம்பதியரை சந்தித்தோம்.
அவர் கூறியது வியப்பாக இருந்தது.
மும்பையில் இவரை அனைவரும் ஒதுக்கி வைப்பார்களாம். எப்போதும் ஒரு இளக்கார பார்வை இருக்கும். ஆனால் எனக்கு இந்த நாடு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நானாக இருக்க முடிகிறது என்றார்.
மக்களின் மனங்கள் எவ்வளவு குறுகி இருக்கிறது. நம் நகையும் பகட்டான. உடையும் தான் ஒருவரின் தரத்தின் அளவுகோலா.
அறிவெனும் ஆயுதம் ஏந்துவோம் என்பது இவர்களுக்கு தெரியாதா.
இன்று அந்த பள்ளியில் இன்டர்ஆக்டிவ் செஷனில் கேள்விகள் கேட்டதே நானும் அந்த பெண்மணியும் மட்டும் தான்.
அலங்கார தேவதைகள் மட்டுமல்ல ஆண்கள் கூட தலைகளை மட்டும் தான் ஆட்டிக்கொண்டு இருந்தனர்.
நீங்கள் உடுத்தும் ஆடை அந்த நிகழ்வுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச காமன் சென்ஸ் கூட இல்லாதவர்கள் சூழலுக்கு ஏற்ப வாழ்பவர்களை ஏளனம் செய்வது அறிவிலித்தனம்.
அறிவெனும் அணிகலன் பூணூங்கள் அதுவே நிரந்தரம்