மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. சொந்த மகன்களை காவலர் செய்த நடுங்க வைக்கும் செயல்.!

குஜராத்தில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 3 மகன்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்த காவலரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் சுக்தேவ் சியால்.

இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்று நண்பகள் சமயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மிகுந்த ஆத்திரத்தில் இருந்த சுக்தேவ் தனது மூன்று மகன்களையும் குசால் (9), உத்தவ் (5), மன்மீட் (3) கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையம் சென்று சுக்தேவ் நடந்தவற்றை கூறி சரனடைந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.