பெண்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் வெள்ளைப்படுதல் ஒன்றாக இருக்கிறது.
வெள்ளைப்படுதல் என்பது, தொற்றுப் பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம்.
அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு கிடையாது. பெண்கள் வெள்ளைப்படுதல் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாகப் பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில், நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாகச் சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்தத் திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பைப் பாதுகாக்கும்.
பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பைப் பாதித்தால், அந்தப் பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும். நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும்.
இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்னை ஏற்படலாம்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதலால் உடல் நலம் பாதிக்கப்படும் அப்படி பாதிக்கப் படாமல் இருப்பதற்கு ஒருசில வைத்தியத்தை பார்ப்போம்.
மிக எளிமையான வைத்திய முறை :
பொதுவாகவே மருதாணி இப்போ கொஞ்சம் கொஞ்சமா வழக்கிலிருந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
பெண்கள் மருதாணி வச்சுக்கணும் என்றால் ரசாயனம் கலந்த மருதாணியை கடைகளில் வாங்கி பயன் படுத்துவது மருத்துவ தன்மை கொடுக்காது.
இயற்கையான மருதாணி இலைகளை அரைத்து கையில் வைக்கும்போது உடலில் இருக்கக் கூடிய வெப்பம் அதிகம் ஆகாமல் இந்த மருதாணி அது நம்மைக் காத்துக் கொள்ளும்.
திருவிழா நாட்களில் அல்லது பண்டிகை காலங்களில் மாதம் ஒருமுறையாவது உங்களால் முடிந்தால் மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த மருதாணி இலையை ஒரு நெல்லிக்காய் அளவு நல்ல மைய அரைத்து அந்த அரைத்த இலைகளை பசும்பாலில் கலந்து காலை மற்றும் மாலை இருவேளை என மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது இந்த வெள்ளைப் படுதல் பிரச்சனையானது பெண்களுக்கு விரைவில் குணமாகும்.
அது போகப் போக வராமல் கூட ஆகிவிடும்.
இதனை சாப்பிடும் போது கண்டிப்பாக நாம் உணவில் ஒரு சில பத்திய முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த மூன்று நாட்களும் நம் உணவில் கண்டிப்பாக புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
புளிப்பு மிகுந்த உணவுகளை கண்டிப்பாக நாம் தவிர்க்க வேண்டும்.
இந்த மாதிரி மருதாணி இலைகளை ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் ஆறு வேளை சாப்பிட்டு வரும் போது வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக குறையும்.