பிரித்தானியா இளவசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பரும், கோடீஸ்வரருமான பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசி டயானாவைப் போலவே கொலை செய்யப்பட்டார் என சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எப்ஸ்டீனுக்கும் டயானாவின் மரணங்களுக்கும் இடையில் ஒரு மோசமான தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று சந்தேகம் நிலவி வருகிறது.
சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான பேர், எப்ஸ்டீன் மற்றும் டயானாவின் மரணங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு பின்னணியில் இருண்ட சக்திகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
எப்ஸ்டீனும் டயானாவும் உண்மையில் ஒரு படுகொலை சதித்திட்டத்தின் பகுதியாக கொல்லப்பட்டனர், ஏனெனில் உலகின் சக்திவாய்ந்த நபர்களைப் பற்றி ரகசியங்கள் அவர்களுக்கு தெரியும்.
டயானா இறந்தபோது இளவரசர் சார்லஸிடமிருந்து விவாகரத்து செய்திருந்தார், அதேபோல் எப்ஸ்டீனின் நண்பர் இளவரசர் ஆண்ட்ரூ தனது பாலியல் சம்பங்களில் பங்கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால், எப்ஸ்டீனுக்கும் டயானாவின் மரணங்களுக்கும் இடையிலான மேலும் ஒரு மோசமான தொடர்பு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்த வாரம் எப்ஸ்டீனின் சிறைச்சாலைக்கு வெளியே உள்ள சிசிடிவி கமெராக்கள் அவர் தற்கொலை செய்த இரவில் வேலை செய்யவில்லை, பொலிஸால் பயன்படுத்த முடியாது என்பது வெளிப்பட்டது
அதேபோல் மர்மமாக, டயானா இறந்த இரவில், அல்மா சுரங்கப்பாதையில் உள்ள 14 கமெராக்களில் எதுவும் வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எப்ஸ்டீன் தனது சிறையில் இறந்து கிடந்தார். ஒரு ஆச்சரியம் இருக்கிறது. இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு மிகப்பெரிய மூடிமறைப்பு எப்ஸ்டீன் மரணம் என பலர் சமூக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.