தீவிரவாதியின் தலையைக் கண்டதும் தலை தெறிக்க ஓடிய சட்டத்தரணிகள்!!!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்து சிதறிய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் கடந்த 27ஆம் திகதி மாலை இந்த விடயம் தொடர்பில் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டதால் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அரசியல்வாதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களுக்கு பலத்த அசௌகரியம் ஏற்பட்டிருந்தது.

இந்த விவகாரங்களையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் அவசர மனுவாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் முன்னறிவித்தல் மனுவை தாக்கல் செய்தார்.

புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை உடன் தோண்டி எடுக்க வேண்டும் என முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்து உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக அமைதியின்மையை தடுக்கவும், இந்த சம்பவத்தை வைத்து மேற்கொள்ளப்படும் சமூக சீர்குழைவை தடுப்பதற்கும் உடன் உடற் பாகங்களை தோண்டி எடுத்து பொறுத்தமான இடத்தில் புதைப்பதற்கு அவசர கட்டளை பிறப்பிக்குமாறு அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்தே குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க அரச அதிபருக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சமூக நலன் கருதி அரச சட்டவாதி மிக புத்திசாதுர்யமாக செயற்பட்டதால் மட்டக்களப்பில் சிலர் ஏற்படுத்த தயாராக இருந்த சமூக அமைதியின்னை தடுக்கப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எவ்வளவு பெரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்த தரப்பினர் நீதிமன்றத்தை நாடி மேற்படி விடயம் தொடர்பான ஒரு அவசர மனுவை தாக்கல் செய்யாதமை வேதனையளிக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இனங்கானப்பட்ட ஒரு சிலருக்கும் நீதிமன்ற அழைப்பாணை பொலிஸாரால் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிமன்ற அழைப்பாணை கிடைத்த அனைவரும் அவசர அவசரமாக முடிவெடுத்து சட்டத்தரணிகளை சந்தித்து தங்களுடைய பிரச்சனைகளை சுட்டிக்காட்டி இன்று நீதிமன்றத்திக்கு சட்டத்தரணிகள் ஊடாக ஆஜர் ஆகினர்.

இந்த வழக்கில் ஆஜர் ஆகிய சிரேஸ்ர சட்டத்தரணி மற்றும் அவருடன் சட்டதரணிகள் சிலரும் இணைந்து நீதிமன்றம் குற்றம் சாட்டிய ஐவர் சார்பில் பிணை மனுத் தாக்கல் செய்தனர்.

இவர்கள் காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்ட விவகாரத்திற்காக மனுத் தாக்கல் செய்யவில்லை.

இவர்கள் தில் உள்ள சட்டத்தரணிகள் ஆனால் ஏன் ரகசியமாக புதைக்கப்பட்ட காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்களை அகற்றக் கோரி எந்த ஒரு அவசர மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை..

மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த விடயத்திற்கு தீர்வு கிடைப்பதற்கு அரச சட்ட வாதிதான் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிற நிலை மட்டக்களப்பில்.

இது ஒரு புறம் இருக்க அடிப்படை அறிவில்லாத சிலர் பிணை மனுத் தாக்கல் செய்தவர்களை கடவுள் என புகழ்வது வேதனைக்குரிய விடயம் இனிவரும் காலங்களில் எனினும் சிறந்த சமூகம் சார்ந்த சட்டத்தரணிகளை இந்த மண் உருவாக்குமா என்பதுடன் சட்டத்தரணிகள் பிணை மனுவில் காட்டிய அக்கறையை புதைக்கப் பட்ட உடற்பாகங்களை அகற்றுவதில் அக்கறை காட்டாமல் அவர்கள் மௌனம் காத்தமை வேதனையை தருகிறது எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.